உறுப்புகள் திருட்டு.. உடல்கள் கடத்தல்.. என்ன நடக்கிறது முதியோர் இல்லங்களில்?
Recommended Video

காஞ்சிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் மரணம் மர்மமாக இருப்பதாகவும் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

அடைக்கப்பட்டுள்ளனர்
மேலும் சாலையோரங்களில் பரிதவிக்கும் முதியவர்களை அந்த கருணை இல்லம் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான ஆண் பெண் முதியவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் திடீர் திடீரென மரணமடைந்து வருகின்றனர்.

சராசரியாக 3 பேர் மரணம்
நாள்தோறும் சராசரியாக 2 பேர் மரணமடைவதாக கருணை இல்லத்தின் நிர்வாகி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உறுப்புகள் திருட்டு
மேலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முதியவர்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாகவும், அவர்களின் உடல் அழுகிய பிறகு எழும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கொலையா?
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முதியவர்கள் இயற்கை மரணமடைகின்றனரா அல்லது அவர்களின் எலும்புகளுக்காக கொல்லப்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ்
இதைத்தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய கருணை இல்லத்தில் காவல்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட நிர்வாகமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

என்ன நடக்கிறது?
தமிழகம் முழுவதும் ஏராளமான முதியோர் இல்லங்கள் உள்ள நிலையில் அங்கெல்லாம் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆதரவு இன்றி தவிக்கும் பலரும் நம்பி போய் சிக்கிகொள்கின்றனர்.

கைவிடும் மனநிலை
ஆனால் எலும்பு மற்றும் உறுப்புகளுக்காக முதியோர்கள் கொல்லப்படுவது மக்களை அதிர வைத்துள்ளது. முதியோரைக் கைவிடும் மன நிலை மாறாத வரை இதுபோன்ற காப்பக கொடுமைகளும் தொடர் கதையாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications