நெல்லையில் போலீஸ் விசாரணையின் போது கைதி உயிரிழப்பு
நெல்லையில் விசாரணை கைதி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கோடரன்குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன். நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது முருகேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் முருகேசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications