ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராகிறார் ஜார்ஜ்?
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதே நம்பிக்கையில்தான் அவரும் இருக்கிறாராம்.
ஆர்.கே.நகர் தேர்தலை மையப்படுத்தி சென்னை கமிஷனர் ஜார்ஜ் தூக்கப்பட்டார். அவருக்கு மாற்று பணியிடம் ஒதுக்கப்படவில்லை. அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் மீண்டும் கமிஷனராக நியமிக்கப்படவிருக்கிறேன். அதனால் தான் காத்திருப்பில் இருக்கிறேன் என நம்பிக்கையாக சொல்லி வருகிறாராம் அவர்.

ஆதங்கம்
இது ஐ.பி.எஸ்.தரப்பில் பரவ, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்கிற புகாரின் பேரில் தான் மாற்றப்படுகிறார். மீண்டும் அவருக்கே கமிஷனர் பதவி தருவது மற்ற அதிகாரிகளை காயப்படுத்துகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்களாம்.

புகார்
ஜார்ஜை விட்டால் கமிஷனர் பதவிக்கு வேறு அதிகாரிகளே இல்லையா? என ஆதங்கப்படும் ஐ.பி.எஸ்.வட்டாரம், தங்களது ஆதங்கத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி வருகிறார்களாம். அதேசமயம், இந்த தடைகளை உடைத்து மீண்டும் கமிஷனராக உட்காரும் திறமை ஜார்ஜ்க்கு உண்டு என் கிறார்கள் அவருக்கு நெருக்கமான ஐ.ஜி.க்கள் .

பணியிடமாற்றம்
தேர்தல் நேரங்களில் ஜார்ஜ் பதவியிடம் மாற்றப்படுவது இது மூன்றாவது முறையாகும். எப்போதுமே ஆளும் தரப்புக்கு அவர் சாதகமாக நடந்து கொள்வதாக வரும் குற்றச்சாட்டுகளின் பேரிலேயே பணியிடமாற்றம் செய்யப்படுவார் இந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரி.

ஜல்லிக்கட்டு தடியடி
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடியடி நடத்தி இளைஞர்களிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது அப்போதைய கமிஷனர் ஜார்ஜ் தலைமையிலான காவல்துறைதான். போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர் என கூறியதாக வைரல் வீடியோக்கள் இணையங்களில் வலம் வந்தது நினைவிருக்கலாம்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications