வடதமிழகத்தில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராயலசீமா பகுதியில் வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக காஞ்சிபுரத்தில் 8 சென்டி மீட்டரும் கேளபாக்கம் மற்றும் போளூரில் தலா 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications