அதிமுகவில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை.. நாங்க ஒன்னாதான் இருக்கோம்.. சத்தியம் செய்யும் ஜெயக்குமார்!
அதிமுகவில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 123 எம்எல்ஏக்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்றோம் அவர் தெரிவித்தார்.
அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து கடந்த வாரமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு கோஷ்டியினரும் மாறி மாறி பேசியதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இழுபறி நிலவி வருகிறது.
நேற்று சேலத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்களுடன் செம்மலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஈபிஎஸ் அணியினருடன் சேரவேண்டாம் என ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு இழுக்கும் அமைச்சர்
இதையடுத்து இரு கோஷ்டிகளும் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது கேள்விக்குறியானது. இந்நிலையில் அமைச்சர் ஜெக்குமார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

காலம் கனிந்துவிட்டது
அப்போது கோஷ்டி இணைப்பு பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்துவிட்டது என அவர் கூறினார். இரு கோஷ்டிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த் வெளிப்படையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலத்தின் கட்டாயம்
123 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் அதிமுகவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தை நடத்த காலம் கனிந்துவிட்டது என்றும் பேச்சுவார்த்தை நடத்துவது காலத்தின் கட்டாயம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மழுப்பிய ஜெயக்குமார்
இரு அணிகள் தனித்தனியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் மழுப்பியவாறே அம்மாவின் கனவை நிறைவேற்றவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாக கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications