மறக்க முடியாத 1924!... கருணாநிதி, வாஜ்பாய், கொள்ளிடம் பாலம்... ஒரு சோக ஒற்றுமை
Recommended Video
திருச்சி: கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் பழைய பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளதை பார்வையிட சாரை சாரையாக மக்கள் கூட்டம் திரண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.அது போல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆறு பாயும் பெரும்பாலான அணைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மேலும் கொள்ளிடம் ஆற்றுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆண்டுகள் ஒன்றியிருந்தது
இந்நிலையில் கொள்ளிடத்தில் உள்ள பழைய பாலம் ஒன்றின் 18, 21, 22-ஆவது தூண்கள் சேதமடைந்து பூமிக்குள் இறங்கியுள்ளது. இதனால் பாலம் எந்நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. இந்த பாலமானது மக்களுடன் இத்தனை ஆண்டுகளாக ஒன்றியிருந்தது.
ஸ்ரீரங்கத்துடன் இணைப்பு
பாலம் மெதுவாக விழும் நிலையில் உள்ளதை பார்த்து வருத்தமடைந்த திருச்சி மக்கள் பாலத்தை சாரை சாரையாக சென்று பார்வையிடுவது உணர்ச்சி பிழம்பின் உச்சமாக உள்ளது. இந்த பாலம் 1924-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 792 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் ஸ்ரீரங்கத்தை இணைத்தது.
பாதசாரிகளுக்கு...
இந்நிலையில் 94 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலத்தின் உத்தரவாத காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் மற்றொரு பாலம் கட்டப்பட்டு 2014-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. இந்நிலையில் பழைய பாலத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
சோக ஒற்றுமை
எல்லாவற்றையும் விட ஒரு சோக ஒற்றுமையில் இந்த பாலத்துக்கும் பங்கு உள்ளது. அது 1924. கருணாநிதி பிறந்தது ஜூன் 3, 1924. அது போல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த ஆண்டும் 1924. அதுபோல் கொள்ளிடம் பாலம் கட்டப்பட்டதும் 1924-ஆம் ஆண்டு ஆகும். கருணாநிதி, வாஜ்பாய் இறந்ததும் ஆகஸ்ட் மாதமாகும். கொள்ளிடம் பழைய பாலமும் தனது வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக முடித்து வரும் இதே ஆகஸ்ட் மாதம்தான்! என்னே ஒரு சோக ஒற்றுமை பாருங்கள்!