எச். ராஜாவின் நிலைமையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது - திருமாவளவன்!
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : அநாகரிகமாக அறுவறுப்பாக பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் செயலைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எச். ராஜாவிற்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 128வது பிறந்தநாளையொட்டி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது : அம்பேத்கர் வரையறுத்த சட்டம் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கிறது.
அம்பேத்கரின் சட்டம் வலுவானது அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று மதவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. அம்பேத்கரின் சட்டத்தை பலவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, உச்சநீதிமன்றம் போன்ற அமைப்பின் மூலம் புதிய விளக்கங்களைத் தருவது புதிய புதிய தீர்ப்புகள் மூலம் பலவீனப்படுத்த நினைக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டம்
ஆனால் இந்த மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. வரலாறு காணாத வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் வீதிக்கு வந்திருக்கிறார்கள். எனவே மதவாதிகளின் எண்ணம் முறியடிக்கப்படும்.

போராட்டக்காரர்கள் பற்றி ராஜா கருத்து
பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர், சீமான் உள்ளிட்ட அனைவருமே தேச துரோகிகள். இவர்கள் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும் என்று எச். ராஜா கூறியது குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவர்
இதற்கு பதிலளித்த திருமாவளவன் எச்.ராஜாவைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் நன்று அறிந்தவர்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதே அவரின் வழக்கம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் எதை வேண்டுமானாலும் அநாகரிகமாக அறுவறுப்பாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மனநல சிகிச்சை தேவை
அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தியவர் எனினும் அவர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்யவில்லை, கைது செய்யவில்லை என்பது தான் வேதனைக்கு உரியது. தனிப்பட்ட முறையில் எங்கள் மீது குறிப்பாக என் மீது வைக்கும் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படவில்லை. எச். ராஜா பரிதாபத்திற்கு உரிய நிலையில் இருப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications