இதுவும் அவசரம்தான்! அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி! காரணத்தை கேட்டு வாயடைத்த அதிகாரிகள்
ராணிப்பேட்டை: கழிவறை தூய்மையாக இல்லை எனக்கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை பயணி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
பொதுவாகவே பொது இடங்கள், அரசு நிறுவனங்களில் கழிவறை எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம்.

குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் பயணிக்கும் ரயில்களின் கழிவறை நிலையை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதனால் பொறுமையிழந்த நபர்தான் தற்போது ரயிலை நிறுத்தி பரபரப்பு செய்தியாக்கி இருக்கிறார்.
கோவை - சென்னை இடையே செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6:15 மணியளவில் கோவையிலிருந்து புறப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் கழிவறை சுத்தமின்றி பயன்படுத்த முடியாத வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கழிவறைக்கே செல்லாமல் 4 மணி நேரம் பயணிகள் பொறுமை காத்திருக்கின்றனர். செல்லும் வழியில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மதியம் அரக்கோணம் வந்த இண்டர்சிட்டி விரைவு ரயில், ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. உடனே ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் அனைவரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, பிரசாந்த் என்ற பயணிதான் தனது பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்துள்ளார் என்பதும், அந்த அபாய சத்தத்தை கேட்டு ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அபாய சங்கிலியை இழுத்ததற்கு சொன்ன காரணம் அறிந்து போலீசாரே வாயடைத்தனர்.
ரயில் பெட்டியில் உள்ள கழிவறை தூய்மையாக இல்லாததால் 4 மணி நேரம் பயணிகள் யாருமே இயற்கை உபாதைகளை கழிக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல முறை புகாரளித்தும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications