இதுவும் அவசரம்தான்! அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி! காரணத்தை கேட்டு வாயடைத்த அதிகாரிகள்
ராணிப்பேட்டை: கழிவறை தூய்மையாக இல்லை எனக்கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை பயணி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
பொதுவாகவே பொது இடங்கள், அரசு நிறுவனங்களில் கழிவறை எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம்.

குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் பயணிக்கும் ரயில்களின் கழிவறை நிலையை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதனால் பொறுமையிழந்த நபர்தான் தற்போது ரயிலை நிறுத்தி பரபரப்பு செய்தியாக்கி இருக்கிறார்.
கோவை - சென்னை இடையே செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6:15 மணியளவில் கோவையிலிருந்து புறப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் கழிவறை சுத்தமின்றி பயன்படுத்த முடியாத வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கழிவறைக்கே செல்லாமல் 4 மணி நேரம் பயணிகள் பொறுமை காத்திருக்கின்றனர். செல்லும் வழியில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மதியம் அரக்கோணம் வந்த இண்டர்சிட்டி விரைவு ரயில், ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. உடனே ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் அனைவரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, பிரசாந்த் என்ற பயணிதான் தனது பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்துள்ளார் என்பதும், அந்த அபாய சத்தத்தை கேட்டு ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அபாய சங்கிலியை இழுத்ததற்கு சொன்ன காரணம் அறிந்து போலீசாரே வாயடைத்தனர்.
ரயில் பெட்டியில் உள்ள கழிவறை தூய்மையாக இல்லாததால் 4 மணி நேரம் பயணிகள் யாருமே இயற்கை உபாதைகளை கழிக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல முறை புகாரளித்தும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications