பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?.. "பரபரப்பு" தகவல்!
சென்னை: 2015ம் வருடமும் முடியப் போகிறது. மக்களுக்கு ஏற்பட்ட பல குழப்பங்களுக்கு நிவாரணமும் கிடைக்கவில்லை, தெளிவும் கிடைக்கவில்லை, விடையும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு தனது மூச்சை நிறுத்திக் கொள்ளப் போகிறது.
இந்த நிலையில்தான் வாட்ஸ் ஆப்பில் இப்படி ஒரு தகவல் ஓடி வந்து கண் முன் நின்றது.. படித்துப் பார்த்தபோது "ப்ப்பா" என்னா ஒரு சிந்தனைடா என்று வாய் தானாக சொன்னது.. மேட்டர் அப்படி பாஸ்.

அந்த வாட்ஸ் ஆப் செய்தி இதுதான்...
2015ம் ஆண்டு முடியப் போகிறது. இந்த வருடத்தில் விடை தெரியாமல் அனைவரது மனதிலும் தொக்கி நிற்பது 3 புதிர்கள்தான்.
முதல் புதிர் - பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?
2வது புதிர் - சல்மான்கானின் காரை யார்தான் ஓட்டினார்?
3வது புதிர் - பிட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணிக்கு உண்மையில் எத்தனை கணவர்கள்?
இந்த மூன்றுக்கும் ஒரே பதில்தான். அது இதுதான் -
இந்திராணியின் கணவர்களில் யாருக்கும் தெரியாத ஒருவர்தான் சல்மான் கானின் காரை ஓட்டிச் சென்றார். ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டார். இதை பாகுபலி பார்த்து விட்டார். இதைப் பாகுபலி பார்த்து விட்டதால், அந்தக் கணவர், கட்டப்பாவைத் தொடர்பு கொண்டு பாகுபலியை கொல்லச் சொல்லி உத்தரவிட்டார். கட்டப்பா கொன்று விட்டார்.!
சிந்தனை செய் மனமே.. செய்தால்.. இப்படிப்பட்ட செய்திகள் வரும் தினமே..!












Click it and Unblock the Notifications