ஜவாஹிருல்லாவை சந்தித்துவிட்டு அப்படியே கர்நாடக அரசுக்கு குட்டு வைத்த திருநாவுக்கரசர்
சென்னை: எந்தக் கட்சி எந்த மாநிலத்தை ஆண்டாலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் காவிரியில் இருந்து தண்ணீரை உடனடியாக கர்நாடாக அரசு திறந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ளது மனித நேய மக்கள் கட்சியின் அலுவலகம். இன்று இந்த அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் ஜவாஹிருல்லாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மனித நேய மக்கள் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். என்றாலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதுகுறித்தும் விவாதித்தோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் மதவாதத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்கள் உள்ளன. அதற்குள் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். வரும் 3ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது. அதற்கு கர்நாடக அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 6000 கன அடி நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆண்டு வருகிறது என்பது முக்கியமல்ல. யாராக இருந்தாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதே போன்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications