பாஜக வலையில் இருந்து நிச்சயம் மீள்வோம்! - ஜெ. பாணியில் எடப்பாடி சொன்ன கதை!
ஜெயலலிதாவின் அரசை வெற்றிகரமாக கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை : அதிமுகவின் இரு அணிகள் ஒற்றுமையாக இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மதுரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்ப்பாடி பழனிச்சாமி குட்டிக்கதை ஒன்றை கூறீயுள்ளார்.
மதுரை வைகை ஆற்றில் ஆரப்பாளையம் அருள்தாஸ்புரம், திருமலைராயர்படித்துறை செல்லூர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலங்களை முதல்வர் பழனிச்சாமி நேற்று நேரில் சென்று திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர், எந்த ஒரு செயலையும்வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அந்த செயலில் ஈடுபடுகிறவர்கள் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார். ஒற்றுமையை உணர்த்துவதற்காக ஜெயலலிதா பாணியில் முதல்வர் பழனிச்சாமியும் ஒரு குட்டி கதை சொன்னார்.
வேடன், புறா கதை
கூட்டம் கூட்டமாக வந்து இரை தேடும் பறவைகளை வேடன் ஒருவன் பிடிக்க திட்டமிட்டு வலை விரிக்க, ஒரு நாள் அவற்றில் சில பறவைகள் சிக்கிக் கொள்ள அவற்றை பிடிக்க வேடன் விரைந்து வந்தானாம். ஆனால் இதைப்பார்த்து மற்ற புறாக்களும் வலைக்குள் சென்று அனைத்து புறாக்களும் முயற்சித்து வலையை அலேக்காக தூக்கிக் கொண்டு பறந்து சென்றதாக தெரிவித்தார்.
யார் வேடன்?
இந்த கதையின் நீதி என்னவென்றால் ஒற்றுமையாக இருந்தால் நாம் அனைவரும் நிச்சயம் ஜெயலலிதா அரசை தொடர்ந்து வழி நடத்திச் செல்லலாம் என்று கதையை முடித்தார். இந்தக் கதையில் வரும் வேடன் யார், சிக்கிக் கொண்ட பறவைகள் யார், மீட்பதற்காக மாட்டிக்கொண்ட பறவைகள் யார் என்பது தமிழக அரசியலை கவனித்து வரும் பொதுமக்களும் ஓ.பிஎஸ் அணிக்கும் நன்கு புரிந்திருக்கும்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications