தமிழக விவசாயிகள் மனித மலம் உண்டுதான் உயிர் வாழ வேண்டுமா?- டெல்லியில் போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நேற்று மனித மலத்தை தின்று நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் மதியம் மனித மலம் உண்ணும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஒருவேளை உணவு கூட கொடுக்க முடியாத காரணத்தால் மனித மலத்தை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடக்கிறது.

நூதன போராட்டம்
மணலில் புதைந்து போராட்டம், உருண்டு போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என தினமும் ஒரு நூதன போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

மனித மலம் உண்ணும் போராட்டம்
57வது நாளான நேற்று மனித மலத்தை தின்னும் போராட்டத்தை நடத்தினர். ஏற்கனவே சிறுநீர் குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மனித மலத்தை தின்று கவனத்தை ஈர்த்தனர்.

உணவு தரமுடியவில்லை
செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தமிழக விவசாயிகள் கடந்த 56 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எங்களை பிரதமர் சந்திக்க மறுத்து வருகிறார். விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருக்கு ஒருவேளை உணவு கூட தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயிர்வாழ வேண்டுமே
அதனால், நாங்கள் உயிர் வாழ்வதற்காக மனித மலத்தை தின்னும் போராட்டம் நடத்தினோம். இதை பார்த்த பிறகாவது கோரிக்கையை நிறைவேற்ற பிரதமர் முன்வர வேண்டும் என்று கூறினார். உலகத்திற்கே உணவளிக்கும் தமிழக விவசாயிகள் மனித மலம் உண்டு போராட்டம் நடத்தியுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித மாமிசம் சாப்பிடுவோம்
மனித மலத்தை தின்று போராட்டம் நடத்திய விவசாயிகள் இனி மனித மாமிசத்தை சாப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலிக்கறி தின்று போராட்டம் நடத்தியவர்கள் இனி மனித கறி சாப்பிட திட்டமிட்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications