தமிழக விவசாயிகள் மனித மலம் உண்டுதான் உயிர் வாழ வேண்டுமா?- டெல்லியில் போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நேற்று மனித மலத்தை தின்று நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் மதியம் மனித மலம் உண்ணும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஒருவேளை உணவு கூட கொடுக்க முடியாத காரணத்தால் மனித மலத்தை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடக்கிறது.

நூதன போராட்டம்
மணலில் புதைந்து போராட்டம், உருண்டு போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என தினமும் ஒரு நூதன போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

மனித மலம் உண்ணும் போராட்டம்
57வது நாளான நேற்று மனித மலத்தை தின்னும் போராட்டத்தை நடத்தினர். ஏற்கனவே சிறுநீர் குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மனித மலத்தை தின்று கவனத்தை ஈர்த்தனர்.

உணவு தரமுடியவில்லை
செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தமிழக விவசாயிகள் கடந்த 56 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எங்களை பிரதமர் சந்திக்க மறுத்து வருகிறார். விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருக்கு ஒருவேளை உணவு கூட தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயிர்வாழ வேண்டுமே
அதனால், நாங்கள் உயிர் வாழ்வதற்காக மனித மலத்தை தின்னும் போராட்டம் நடத்தினோம். இதை பார்த்த பிறகாவது கோரிக்கையை நிறைவேற்ற பிரதமர் முன்வர வேண்டும் என்று கூறினார். உலகத்திற்கே உணவளிக்கும் தமிழக விவசாயிகள் மனித மலம் உண்டு போராட்டம் நடத்தியுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித மாமிசம் சாப்பிடுவோம்
மனித மலத்தை தின்று போராட்டம் நடத்திய விவசாயிகள் இனி மனித மாமிசத்தை சாப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலிக்கறி தின்று போராட்டம் நடத்தியவர்கள் இனி மனித கறி சாப்பிட திட்டமிட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications