தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுப்போம்: ராஜ்நாத்சிங்
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னுரிமை கொடுக்கும் என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சித் தலைவர்களான தேமுதிகவின் விஜயகாந்த், மதிமுகவின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருடன் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு விவரமும் தொகுதிகள் விவரமும் அறிவிக்கப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது:
இந்திய அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு நன்றி.
இந்த கூட்டணி அமைய பாடுபட்ட தமிழருவி மணியனுக்கும் மிக்க நன்றி. தமிழக மீனவர் பிரச்சனை என்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்னுரிமை கொடுக்கும்.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணததற்கு காங்கிரஸ் அரசே காரணம். அதேபோல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கவனம் செலுத்தும். தேசிய ஜனநாயகக் கூட்டணியானது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து நடந்து கொள்ளும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
அத்வானியின் விருப்பம்..
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அத்வானி போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போபாலிலா அல்லது காந்திநகரிலா எங்கு போட்டியிடுவது என்பதை அத்வானியே முடிவு செய்வார் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications