உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்துவைக்கத் தவறிவிட்டது தமிழக அரசு : பாலகிருஷ்ணன்
உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்துவைக்க தமிழக அரசு தவறிவிட்டது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சரியான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கத் தமிழக அரசு தவிறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் குறைத்துள்ளது. அதே நேரம் கர்நாடகத்திற்கான நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தத் தீர்ப்பால் தமிழக விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மிகுந்த அதிருப்தி அடைந்து உள்ளனர். தொடர்ந்து தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழகம் மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும் , அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்துவைக்கத் தமிழக அரசு தவறிவிட்டதன் காரணமாகவே தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக வந்துள்ளது என்று பாலகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.