ராஜேஷ் லக்கானி உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!
தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சென்னை: தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
அதன்படி சாய்குமார் ஐஏஎஸ் முதலமைச்சரின் முதன்மை செயலாளர்-1 ஆக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். எல்காட் மேலாண்மை இயக்குனர் சுடலைக்கண்ணன் ஐஏஎஸ் திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
முன்னாள் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சிஎம்டிஏ உறுப்பினர் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சந்திரமோகன் ஐஏஎஸ் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
நந்த குமார் ஐஏஎஸ் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ராமச்சந்திரன் ஐஏஎஸ் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஷாம்பு கல்லோலிகர் வீட்டு வசதி வாரிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். விஜயராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாரிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
விவேகானந்தன் தொழில்நுட்ப கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சோமநாதன் வணிகவரித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதுல்யா மிஸ்ரா வருவாய் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.