ஆளுநரின் சென்னை வருகை மேலும் தாமதம்? ஓபிஎஸ் ராஜினாமா வாபஸ்?
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவின் சென்னை வருகை மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருவது மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் மன்னார்குடி கோஷ்டியின் கடும் நெருக்கடியால் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வமே பகிரங்கமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சசிகலா உள்ளிட்டோரின் நெருக்கடியாலே தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் எனவும் அவர் உண்மையை போட்டுடைத்தார்.
இதனால் சசிகலா முதல்வர் நாற்காலியில் அமரும் பேராசைக்கு முட்டுக் கட்டை விழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது வித்யாசகர் ராவின் சென்னை வருகை தாமதமாகும் என மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு வித்யாசகர் ராவ் வரும்போது ஓ. பன்னீர்செல்வம் தம்முடைய ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tamil Nadu Governor Vidyasagar Rao is waiting for clarity on Sasikala's appointment as next Tamil Nadu Chief Minister.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருவது மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications