காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தமிழக அரசின் பிரதிநிதியின் பெயர் பரிந்துரை!
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தமிழக அரசின் பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் பெயரை மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணையின் போது 4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களது பிரதிநிதிகள் பெயர்களை மத்திய அரசிடம் தெரிவிக்கவும் உத்தரவிட்டது.

இதன்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதியை தமிழக அரசு இன்று பரிந்துரைத்துள்ளது. காவிரில் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சுப்பிரமணியத்தின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் தங்களது பிரதிநிதிகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications