முல்லைப் பெரியாறு: மத்திய தொழில் பாதுகாப்புப் படை கோரும் தமிழக அரசு!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் அம் மாநிலக் கட்சிகள் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இம்முறை பிரச்சினை பெரிதாகும் முன் தீர்வு காணக் கோரியும், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை கோரியும் மத்திய அரசை நாட முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை மீண்டும் கிளற ஆரம்பித்துள்ளன அம்மாநில அரசியல் கட்சிகள்.

152 அடி
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அணையின் நீர்மட்டம் 142 அடியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவை 152 அடியாக உயர்த்த தீர்ப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளதால், இதற்கான அனுமதியை பெறுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

பினராயி விஜயன் எதிர்ப்பு
ஆரம்பத்தில் தமிழகத்துக்கு சாதகமாக, அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த ஏதுவாகப் பேசி வந்த பினராயி விஜயன், இப்போது எதிர்ப்பாக பேச ஆரம்பித்துள்ளார்.

மீண்டும்
பருவமழை தீவிரமாக அணைக்கு இப்போது நீர்வரத்து அதிகமாகியுள்ள நிலையில், அணை பாதுகாப்பில் சந்தேகம், புதிய அணை கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை கேரள கட்சிகள் மீண்டும் கிளப்பிவிட்டுள்ளன.

தமிழக அரசு முனைப்பு
இந்தப் பிரச்சினை பெரிதாவதற்கு முன்பு, அணையை முழுவதுமாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. காரணம் அணை தமிழக அரசின் பராமரிப்பில் இருந்தாலும், பாதுகாப்பு கேரள அரசு வசம் உள்ளது. கேரள வனத்துறை, போலீஸ் கெடுபிடிகளைத் தாண்டி அணைக்குச் செல்வதில் தமிழக அதிகாரிகள், பணியாளர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது.
எனவே அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைக் கோரி மத்திய அரசை நாடவிருக்கிறது தமிழக அரசு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications