அடேங்கப்பா.. 500 டாஸ்மாக் கடையை மூடியதால் அரசுக்கு இழப்பு ரூ.6,636 கோடி: ஓ.பி.எஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் தமிழக அரசுக்கு ரூ.6,636.08 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.
புற்றீசல் போல பெருகிவிட்ட டாஸ்மாக் மதுபான கடைகளால், சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போவதாக பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில், படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த நிலையில், முதல்கட்டமாக 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார்.
இதன் மூலம், தமிழக அரசுக்கு ரூ.6,636.08 இழப்பு ஏற்பட்டுள்ளதாக, பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார். அப்படியானால், எஞ்சிய டாஸ்மாக் கடைகள் மூலம், தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications