பெரியார் சிலை உடைப்பு: நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி தமிழக எம்பிக்கள் நோட்டீஸ்
பெரியார் சிலை உடைக்கப்படும் கருத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி தமிழக எம்பிக்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
டெல்லி: பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக, அதிமுக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று திமுக, திக உள்ளிட்ட கட்சிகள் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் வருத்தம் தெரிவித்தும் ஒருபதிவை போஸ்ட் செய்துள்ளார். எனினும் அதை ஏற்க அரசியல் கட்சிகள் மறுக்கின்றன.
பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அவை அலுவலல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலை உடைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications