காமராஜ் அறக்கட்டளையிலிருந்து ஜெயந்தி நடராஜன், வாசன் விலகல்... அவர்களுக்குப் பதில் புதிதாக யார்?
சென்னை : காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் விலகியதால் காமராஜ் அறக்கட்டளைக்கு இரண்டு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு 5 பேர் நிர்வாகிகளாக உள்ளனர். இதில், மாநில காங்கிரஸ் தலைவர் நிர்வாக அறங்காவலராகவும் 4 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த அறக்கட்டளை தான் சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை பராமரித்து வருகிறது.
இந்த அறக்கட்டளையில் இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், யசோதா, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்தனர். இவர்களில் ஜி.கே.வாசன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கி விட்டார்.

சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் இருந்து விலகினார். இதனால், காமராஜ் அறக்கட்டளையின் இரண்டு நிர்வாகிகள் குறைந்துள்ளனர். எனவே, காலியாக இருக்கும் 2 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை நியமிப்பது பற்றி காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
இன்று மாலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் தலைமையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களான ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், மணி சங்கர் அய்யர், தங்கபாலு, பிரபு, கோபண்ணா உள்பட 40 பேர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு 2 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது பற்றியும், கட்சி உறுப்பினர் சேர்க்கை பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications