டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வந்துருச்சு.. 164 பேர் தேர்ச்சி !
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 164 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் இந்த முடிவுகளைக் காணலாம்.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 79 பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் பல்வேறு காரணங்களால் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், டி.எஸ்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. இதில், 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
தேர்ச்சி பெற்ற 164 பேரும் ஆன்லைன் விண்ணப்பங்களில் குறிப்பிட்ட தகுதிகளை நிரூபிக்கும் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் சென்னை பார்க் டவுன், பிரேசர் பாலச் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications