வானிலை அப்டேட்: சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும்.. தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியாக வானிலை நிலவி வருகிறது. சென்னையில் நேற்று முதல்நாள்தான் இந்த வருடத்தில் முதல்முறையாக மழை பெய்தது. இந்த நிலையில் இந்த வானிலை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று நீலகிரி போன்ற மழை பிரதேசங்களில் அதிக அளவில் மழை பெய்தது. அந்த மழை இன்று தொடர வாய்ப்புள்ளது. வங்க கடலில் ஏற்படும் பருவநிலையை பொருத்து, மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு