கும்பகோணத்தில் பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு 2100 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்
கும்பகோணத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடத்தில் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழியர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளகூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 4500 பேருக்கும், கோவையில் 11819 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோண கோட்ட மேலாளர் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் 2100 பேரிடம் விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications