கும்பகோணத்தில் பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு 2100 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்
கும்பகோணத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடத்தில் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழியர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளகூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 4500 பேருக்கும், கோவையில் 11819 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோண கோட்ட மேலாளர் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் 2100 பேரிடம் விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications