கும்பகோணத்தில் பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு 2100 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்
கும்பகோணத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடத்தில் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழியர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளகூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 4500 பேருக்கும், கோவையில் 11819 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கும்பகோண கோட்ட மேலாளர் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் 2100 பேரிடம் விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications