நல்லகண்ணு கோரிக்கையால் 8 நாள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற திருச்சி கல்லூரி மாணவர்கள்!
திருச்சியில் 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
திருச்சி : நீட் தேர்வுக்கு தடை கோரி கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத்தில் இருந்த மாணவர்களை அரசியல் மூத்தத் தலைவர் நல்லகண்ணு சந்தித்து போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதையடுத்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். மூத்த அரசியல்வாதியான நல்லகண்ணுவின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பழச்சாறு பொடுக்க போராட்ட்ம முடிவுக்கு வந்தது.

அரசுகள் நடவடிக்கை தேவை
இதையடுத்து மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : தாழ்த்தப்பட்ட சமுதாய்ததை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு முறையான நீதி வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரம் இருந்து வந்தார்கள். அவர்களின் உணர்வுகளை எண்ணிப்பார்த்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கண்டனம்
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அரசு காவல்துறையினரை வைத்து மிரட்டுவது கண்டனத்திற்கு உரிய செயல். தங்களின் உரிமைகளுக்காகவே மாணவர்கள் போராடுகின்றனர்.

போராட்டம் வாபஸ்
திருச்சியில் 8 நாட்களாக இந்த மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடலை வருத்திக்கொண்டு மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி கேட்டு கொண்டதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

13ந் தேதி அறவழிப் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 13-ந்தேதி நடைபெறும் அறவழி போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். சமூக நீதியை வென்றெடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அறவழி போராட்டம் நடைபெறும், என்றும் அவர் கூறினார்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications