நல்லகண்ணு கோரிக்கையால் 8 நாள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற திருச்சி கல்லூரி மாணவர்கள்!
திருச்சியில் 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
திருச்சி : நீட் தேர்வுக்கு தடை கோரி கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத்தில் இருந்த மாணவர்களை அரசியல் மூத்தத் தலைவர் நல்லகண்ணு சந்தித்து போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதையடுத்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். மூத்த அரசியல்வாதியான நல்லகண்ணுவின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பழச்சாறு பொடுக்க போராட்ட்ம முடிவுக்கு வந்தது.

அரசுகள் நடவடிக்கை தேவை
இதையடுத்து மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : தாழ்த்தப்பட்ட சமுதாய்ததை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு முறையான நீதி வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரம் இருந்து வந்தார்கள். அவர்களின் உணர்வுகளை எண்ணிப்பார்த்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கண்டனம்
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அரசு காவல்துறையினரை வைத்து மிரட்டுவது கண்டனத்திற்கு உரிய செயல். தங்களின் உரிமைகளுக்காகவே மாணவர்கள் போராடுகின்றனர்.

போராட்டம் வாபஸ்
திருச்சியில் 8 நாட்களாக இந்த மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடலை வருத்திக்கொண்டு மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி கேட்டு கொண்டதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

13ந் தேதி அறவழிப் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 13-ந்தேதி நடைபெறும் அறவழி போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். சமூக நீதியை வென்றெடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அறவழி போராட்டம் நடைபெறும், என்றும் அவர் கூறினார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications