தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை தொடக்கம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாற்றத்தால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கத்துக்கு எதிரான வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன் இன்று விசாரிக்கப்படுகிறது.

இதில் கடந்த விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சல்மான் குர்ஷித், ராகேஷ் திரிவேதி, அரிமா சுந்தரம், துஷ்யந்த் தவே ஆகியோர் வாதாடினர். அப்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கவும், 18 பேர் தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கவும் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தவும் தடை விதித்து வழக்கு விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து புதிய நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையில் தினகரன் தரப்பில் அபிஷேக் சிங்வியும் அரசு தரப்பில் முகுல் ரோத்தகியும் ஆஜராகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications