அதிமுகவின் முகமாக மாறத் துடிக்கும் தினகரன்...கைவசம் வைத்துள்ள அடேங்கப்பா பிளான்?
டிடிவி தினகரன் சிறை செல்வதற்கு முன் இருந்த அதே அந்தஸ்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக தெரிகிறது.
சென்னை: அதிமுகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தனக்கே இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி டிடிவி.தினகரன் காய்களை நகர்த்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் சசிகலா முடிவெடுக்கும் அதிகார மையமாக வந்ததால் மன்னார்குடி கும்பல் குஷியானது. அப்போதும் சசிகலாவை இயக்கியது தினகரன் மற்றும் திவாகரன் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த சந்தோஷம் உச்சநீதிமன்றத்தின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பால் பறிபோகும் நிலை வந்தததும் அதிகார மையம் தினகரன் கைக்கு மாறியது.
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கட்சியினர் மத்தியில் நல்ல பெயர் சம்பாதித்து வந்ததோடு அவரின்றி கட்சியில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்ற நம்பர் ஒன் ஆளாக இருந்தார். ஆனால் கட்சியின் சின்னமும், பெயரும் பறிபோய்விடும் என்று சில அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தன் பேரில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தினகரன்.

சீண்டாத அதிமுகவினர்
எனினும் தினகரனுக்கு ஆதரவாகவே அதிமுக அம்மா அணியினர் செயல்படுகின்றனர் என்பது ஆணித்தரமாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறை சென்ற ஒரு மாதத்தில் அனைத்தும் தலைகீழாகிவிட, தற்போது தினகரனை அதிமுக அம்மா அணி அமைச்சர்கள் சீண்டுவதாக தெரியவில்லை.

குடைச்சல் ஆரம்பம்
இதனால் கடுப்பான தினகரன் தான் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஒரு பக்கம் தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து முதல்வர் பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாகவே தனது ஆதரவு 34 எம்எல்ஏக்களை அனுப்பி நேற்று முதல்வரிடம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தனது தலைமையில் நடத்த வேண்டும் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார்.

ஓட்டு வேண்டுமா, வேண்டாமா?
இதோடு நின்று விடாமல் முதல்வர் பழனிசாமி ஆட்சியை பாஜக விட்டு வைத்திருப்பதற்கு முக்கிய காரணமான குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது 34 எம்எல்ஏக்களின் ஓட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஈபிஎஸ் அணிக்கு சாதகமாக இருக்க வேண்டுமெனில் தினகரன் தான் கட்சியை தலைமை தாங்குவார், அதில் யாரும் தலையிடக் கூடாது என்றும் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுகவின் முகமாக மாற ஆசை
கோஷ்டிகள் இணைப்பிற்காக விலகுகிறேன் என்று தினகரன் சொன்னதும், அதிமுகவை ஒன்று சேர்த்து அனைவரையும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தில் தானாம். அதிமுகவின் முகம் என்றால் அது தானாகத் தான் இருக்க வேண்டும் என்பது தான் தினகரனின் மாஸ்டர் பிளானாம். இதற்கான காய் நகர்த்தல்கள் தான் தற்போது அரங்கேறி வருவதாகவும், விரைவில் அதிமுக அரசியலில் மிகப்பெரிய ஆட்டத்தை தினகரன் ஆட உள்ளதாகவும் விவரமறிந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications