தூத்துக்குடியில் கடைகளை நாளைக்குள் திறக்க துரித நடவடிக்கை.. கலெக்டர் நந்தூரி பேட்டி
தூத்துக்குடியில் கடைகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி: கடைகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக இன்று சந்தீப் நந்தூரி பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடியில் 13 பேரை பலி கொண்ட சம்பவத்துக்குக் காரணமான தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ்யும், எஸ்.பி மகேந்திரன் இருவரும் மாற்றப்பட்டனர்.
புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி, எஸ்.பியாக முரளி ரம்பாவும் இன்று பதவியேற்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நத்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடியில் தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

அம்மா உணவகம்
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் உணவு தேவைப்படுவோருக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருட்களுக்கு தட்டுப்பாடு
தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் ஆலோசனை
இதன்காரணமாக நாளைக்குள் கடைகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் மும்முரம் காட்டி வருகிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் கடைகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அமைதி திரும்ப முக்கியத்துவம்
இதனிடையே அமைதி திரும்பினால் கடைகளைத் திறக்க கடைக்காரர்கள் தயாராக உள்ளனர். மேலும்
பலியானவர்கள் எண்ணிக்கை, விவரம் மாலையில் தெரிவிக்கப்படும். நகரில் அமைதி திரும்ப முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மாலையில் தெரிவிக்கப்படும்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி முரளி ரம்பா, தூத்துக்குடியில் இதுவரை எத்தனை பேர் கைது என்பது குறித்த முழு விவரம் மாலையில் தெரிவிக்கப்படும்.

அமைதி காக்க வேண்டும்
மக்களின் குறை தீர்க்க எஸ்பி அலுவலகத்தை எப்போதும் அணுகலாம். மக்கள் புகார் அளிக்க வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும். தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தாமல் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications