பிசி சாலையில் விளையாட்டு... தூத்துக்குடியில் மக்கள் உற்சாகம்
சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி, அங்கு பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்னும் புதிய திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி, அங்கு பொதுமக்கள் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வகையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாதத்தின் ஒருநாள் சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி அங்கு பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களை விளையாடலாம் என மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதனையடுத்து, வாரவிடுமுறையான நேற்று, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முதல், குரூஸ்பார்னபத்து சிலை வரை சாலையில் நான்கு மனி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதையடுத்து அந்த சாலையில் பொதுமக்கள் கிரிக்கெட், ஹாக்கி, ஹேண்ட்பால், பேஸ்கட் பால், கோகோ, ஜிம்னாஸ்ட்டிக், சிலம்பம், சைக்கிள், யோகா, பரமபதம் போன்ற பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். அப்போது மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.












Click it and Unblock the Notifications