ஜிமிக்கி கம்மல் மெட்டில் டெங்கு விழிப்புணர்வு பாடல்
டெங்கு நோயை தடுக்கும் விதமாக செய்ய வேண்டியவை குறித்து தூத்துக்குடியை சேர்ந்த விழைவுப் பூக்கள் அமைப்பு பொதுமக்களுக்காக விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்குவை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் விதத்தில் விழைவுப்பூக்கள் என்ற சேவை அமைப்பின் சார்பாக விழிப்புணர்வு பிரச்சார பாடல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது, அதிலும் சிறு குழந்தைகள் டெங்கு நோய்க்கு பரிதாபமாக பலியாகி வருகின்றனர். இதனால் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விழைவுப் பூக்கள் அமைப்பை சேர்ந்த கவிஅன்பு என்பவர் டெங்கு விழிப்புணர்வு பாடலுக்கான வரிகளை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் முதல் பிரதியை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி வெளியிட அமைப்பின் நிறுவனர் பாலவிநாயகம் பெற்றுக் கொண்டார்.

டெங்கு அறிகுறிகள்
ஜிமிக்கிக் கம்மல் பின்னிசையில் ஒலிக்க டெங்குவின் அறிகுறிகள் என்ன என்பதில் தொடங்குகிறது பாடல். டெங்குவிற்கான அறிகுறிகள் என்ன என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதிக அளவு காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, கண்வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்றவை நோயின் அறிகுறிகள்.

கொசு வராமல் எப்படி தடுப்பது?
வீடுகளில் கொசு வராமல் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செரட்டை, முட்டை ஓடு, தென்னை மட்டை, டயர் இது போன்ற தண்ணீர் தேங்கும் பொருளை அப்புறப்படுத்த வேண்டும். அரளி நொல்லி முடக்கத்தான் மூலிகையில் புகை மூட்டம் போட்டு கொசு வராமல் தடுக்கலாம்.

இரண்டு வேளை மருந்து
காய்ச்சல் வந்தவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு கசாயம் காலை மாலை இரண்டு வேளையும் குடிக்கலாம். காய்ச்சலை மேலும் பரவாமல் தடுக்கலாம்.
விழிப்புணர்வு பாடல்
சுற்றுப்புறம் சுத்தமாக மாற வேண்டும், மக்கள் நலமாக வாழ வேண்டும். தடுக்கலாம் வா, தமிபி தடுக்கலாம் வா டெங்குவை தடுக்கலாம் வா என்று பாடல் முடிகிறது. இந்த இளைஞரின் விழிப்புணர்வுப் பாடல் முயற்சி பாராட்டிற்குரியதே.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications