போராட்டகளமாகும் தூத்துக்குடி தெருக்கள்... போலீஸ் தடுப்பதால் தள்ளுமுள்ளு... எம்எல்ஏ கீதாஜீவன் கைது
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தெருக்கள் முழுவதிலும் போராட்டக்காரர்கள் நுழைவதால் அவை போராட்ட களமாக காட்சியளிக்கின்றன.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தெருக்கள் முழுவதிலும் போராட்டக்காரர்கள் நுழைவதால் அவை போராட்டகளமாக காட்சியளிக்கின்றன. போராட்டம் நடத்திய எம்எல்ஏ கீதாஜீவன் கைது செய்யப்பட்டார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
போலீஸ் தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்றனர். அலை அலையாக மக்கள் பேரணியில் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் போராட்டக்காரர்கள் நுழைந்து வருகின்றனர்.
போலீஸ் கைது முயற்சியை முறியடித்து மக்கள் பேரணி தொடர்ந்து வருகிறது.
பிஞ்சு குழந்தைகள், பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கீதாஜீவன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். ஸ்டெர்லைட்டை மூடு மூடு என்ற முழக்கம் விண்ணை பிளக்கிறது.
மாற்றுத் திறனாளிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 144 தடை உத்தரவை மீறி 15 கிமீ பேரணி பொதுமக்கள் நடத்தினர்.