மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் தவெகவினர் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனைகள், தொழில் நடத்துவோர், பேருந்துகளில் தவெகவினர் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் செய்யும் சம்பவங்கள் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, மே 10ஆம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இதன்பின் அமைச்சரவை உருவாக்கப்பட்டு, தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்பின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தவெகவினர் தனிச்சையாக ஆய்வு மேற்கொண்டு அட்ராசிட்டி செய்து வருகிறார்கள்.

TVK

தேனியில் மே 19ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பிரசவ வார்டுக்குள் தவெகவினர் அத்துமீறி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் கூட அனுமதிக்காமல் நோயாளிகளுக்கு இடையூறு ஏர்படுத்தியது சர்ச்சையாகியது. சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் தவெகவின் மருத்துவ அணியினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதேபோல் 6 நாட்களுக்கு முன் தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அம்மா உணவகங்களிலும் தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆய்வு என்ற பெயரில் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். அப்போது தவெகவினர் அரசு அதிகாரிகளை கேள்வி கேட்டதோடு, எச்சரிக்கையும் விடுத்து சென்றனர். இதனை ரீல்ஸாக எடுத்து பதிவிடும் கலாச்சாரமும் அதிகரித்துள்ளது.

தவெக ஆட்சி அமைந்த பின் மே 25ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ஒரு லட்சம் மாமூல் கொடுக்க வேண்டும் என்று தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மிரட்டினார். இதனை கண்டித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின.

மே 22ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் 15வது மண்டலக் குழு கூட்டத்தில் புகுந்த தவெகவினர், ரீல்ஸ் எடுத்ததோடு மைக் மூலமாக அதிகாரிகளுக்கு அட்வைஸ் கொடுத்தனர். தற்போது பேருந்தில் தவெக நிர்வாகி ஒருவர் நடத்துநரிடம் அடையாள அட்டை கேட்டு பஞ்சாயத்து செய்துள்ளார். இதனால் நடத்துநர் பதற்றம் அடைந்து அமைதி காக்க, அங்கிருந்த பொதுமக்கள் அவரை திட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் ரீல்ஸாக வெளியாகி இருக்கிறது. தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டதே தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியினரும் இதுவரை ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகளை கேள்வி எழுப்பியது இல்லை.

எம்எல்ஏ-க்கள் ஆய்வு செய்தால் கூட சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து, அதனை சரி செய்ய வேண்டும். ஆனால் தவெகவினர் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் உத்தரவின் பெயரில் இப்படியான ஆய்வுகளில் ஈடுபடுவது அரசு ஊழியர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+