Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக நடித்து மின்வாரிய ஊழியரிடம் லஞ்சம் – இரண்டு பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் மின் வாரியப் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி, லஞ்ச ஒழிப்பு போலீசாராக நடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சேலத்தைச் சேர்ந்த ராமு என்பவர் பணியாற்றி வருகிறார்.

Two fake vigilance officers arrested in Salem…

இவரிடம் நேற்று காலை அலுவலகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் வந்து தங்களை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எனக் கூறினார்.

பின்னர், "உன் மீது நிறைய இலஞ்சப் புகார் உள்ளது. ரூபாய் 10 ஆயிரம் கொடுத்தால் அந்தப் புகாரை சரி செய்துவிடலாம் என்று ராமுவிடம் கூறினர்.

இதையடுத்து, ராமு தன்னிடம் ரூபாய் 2 ஆயிரம்தான் இருக்கிறது என்று கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை கொஞ்ச நேரத்தில் ஏற்பாடு செய்து தருகிறேன் அது வரை அலுவலகத்திலேயே இருங்கள் என்று கூறி விட்டு அருகிலுள்ள ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, அங்கு வந்த ஓமலூர் போலீஸார், மின்வாரிய ஊழியரிடம் அதிகாரிகள் போல் நடித்து லஞ்சம் கேட்ட இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த சபாபதி, அதிக் அஹமது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரில், ஒருவர் பெட்டிக் கடை வைத்துதிருப்பதும், இன்னொருவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+