இலங்கையில் இருந்து கோடியக்கரை வந்த 2 ஈழத் தமிழர் கைது
கோடியக்கரை: இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு திருட்டு படகில் வந்த 2 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வல்வெட்டி துறையைச் சேர்ந்த சிந்தாதுரை, நிரஞ்சன் இருவரும் நேற்று ஒரு படகில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை காட்டுப்பகுதியில் வந்து இறங்கினர்.
இவர்களை அந்த பகுதியை சேர்ந்த மீனவர் மனோகரன் என்பவர் பார்த்தார். அப்போது அவர்கள் 2 பேரும் காட்டுபகுதிக்கு தப்பி ஓடினர். இதுகுறித்து மனோகரன் கோடியக்கரை சுங்க இலாகா அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஓடிய சிந்தாதுரை, நிரஞ்சன் ஆகிய 2 பேரையும் தேடிப் பிடித்து கைது செய்தனர்.. அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின்னாக தகவல்களைத் தெரிவித்துள்ளனர். தாங்கள் இருவரும் திருட்டு படகில் கோடியக்கரைக்கு வந்ததாக தெரிவித்தனர். 2 பேரும் காட்டுப்பகுதியில் இறங்கிய இடத்திற்கு இன்று அவர்களை அழைத்து சென்று சுங்க இலாகாவினர் தீவிர விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications