Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் இருந்து கோடியக்கரை வந்த 2 ஈழத் தமிழர் கைது

Subscribe to Oneindia Tamil

கோடியக்கரை: இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு திருட்டு படகில் வந்த 2 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வல்வெட்டி துறையைச் சேர்ந்த சிந்தாதுரை, நிரஞ்சன் இருவரும் நேற்று ஒரு படகில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை காட்டுப்பகுதியில் வந்து இறங்கினர்.

இவர்களை அந்த பகுதியை சேர்ந்த மீனவர் மனோகரன் என்பவர் பார்த்தார். அப்போது அவர்கள் 2 பேரும் காட்டுபகுதிக்கு தப்பி ஓடினர். இதுகுறித்து மனோகரன் கோடியக்கரை சுங்க இலாகா அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஓடிய சிந்தாதுரை, நிரஞ்சன் ஆகிய 2 பேரையும் தேடிப் பிடித்து கைது செய்தனர்.. அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின்னாக தகவல்களைத் தெரிவித்துள்ளனர். தாங்கள் இருவரும் திருட்டு படகில் கோடியக்கரைக்கு வந்ததாக தெரிவித்தனர். 2 பேரும் காட்டுப்பகுதியில் இறங்கிய இடத்திற்கு இன்று அவர்களை அழைத்து சென்று சுங்க இலாகாவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+