உண்ணாமலைக் கடையில் மூடப்பட்ட மதுக் கடை.. வேறு இடத்தில் திறப்பு.. போலீஸ் பாதுகாப்புடன்
மார்த்தாண்டம்: காந்தியவாதி சசிபெருமாள் மறைவைத் தொடர்ந்து உண்ணாமலைக் கடையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் திறந்துள்ளனர் அதிகாரிகள். முன்னதாக இந்த திறப்பைக் கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தி விட்டு கடையைத் திறந்துள்ளனர் போலீஸார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது உண்ணாமலைக் கடை. அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். இவர்களுக்காக சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். இந்தப் போராட்டத்தின்போதுதான் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மக்கள் ஆவேசத்திலிருந்து தப்பிக்க உண்ணாமலைக்கடை மதுக் கடை மூடப்பட்டது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில் அங்கு மூடப்பட்ட மதுக் கடையை தற்போது வாகவிளை பகுதிக்கு மாற்றியுள்ளனர் அதிகாரிகள். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த கடையைத் திறந்துள்ளனர். இதுகுறித்துத் தகவல் கிடைத்து விரைந்து வந்து போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்டோர் கடையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களிடம் போலீஸார் சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அனைவரையும் கைது செய்து அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் கடைக்குத் தேவையான மது பாட்டில்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு கடையைத் திறந்து விட்டனர் அதிகாரிகளும், போலீஸாரும்.
சசிபெருமாள் மறைவைத் தொடர்ந்து மூடப்பட்ட கடையை வேறு இடத்தில் திறந்துள்ள அதிகாரிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications