மதுரை என்கவுண்டர்... நீதிபதி விசாரணை தொடக்கம்!
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக நீதிபதி விக்னேஷ்மது விசாரணையை தொடங்கியுள்ளார்.
மதுரை: மதுரையில் நேற்று பட்டபகலில் ரவுடிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வாடிப்பட்டி மாஜிஸ்திரேட் விக்னேஷ்மது விசாரணையை தொடங்கியுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து நீதிபதி விசாரணை தொடங்கியுள்ளது.
மதுரை திண்டுக்கல் சாலையில் சிக்கந்தர்சாவடியில் நேற்று மாலை குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருந்த வீட்டிற்குள் வைத்து ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை மாற்று உடையில் இருந்த போலீசார் பிடிக்க முயன்ற போது கைத்துப்பாக்கியால் சுட முயன்றதால் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரவுடிகள் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்தி உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ரவுடிகளை போலீசார் உடம்பின் மற்ற இடங்களில் சுடாமல் நேராக தலையில் சுட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே என்கவுன்டர் தொடர்பாக வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மது விசாரணையை தொடங்கியுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து இந்த விசாரணையானது தொடங்கியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications