அண்ணே உங்களுக்குத்தான் போட்டேன்.. வடிவேல் பட பாணியில் வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற வேட்பாளர்கள்
திருப்பத்தூர்: வடிவேல் பட பாணியில் உங்களுக்குத்தான் வாக்களித்தேன் என்பதை நிரூபிக்க வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நிலையில் 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைக்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை
இந்த இரு கட்ட தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல்களுக்கு வாக்குச் சீட்டு அளிக்கும் நடைமுறையே தற்போது உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குகளை வெள்ளை நிற வாக்குச் சீட்டிலும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டிலும், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர் பதவிக்கு பச்சை நிறவாக்குச் சீட்டிலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டிலும் வாக்களிக்க வேண்டும்.

அதிகாரி
இதில் திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது வார்டு எண் 1 இல் அளிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை எண்ணிய தேர்தல் அதிகாரிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த வார்டில் வாக்களித்த இருவர் வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக பூத் சிலிப்பை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் தேர்தல் அதிகாரி பூத் சிலிப்பை காட்டினார்.

வாக்காளர் அடையாள அட்டை
மேலும் அவர் கூறுகையில் யாரோ இருவர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஒருவேளை சினிமா படத்தில் வருவது தாங்கள் இருவரும் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களித்தோம் என காண்பிப்பதற்காக இப்படி செய்திருக்கலாம் என்றார். இது போல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை, சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

வடிவேல் வாக்குச் சாவடி
வடிவேல் படத்தில் ஒரு காமெடியில் ஒருவரிடம் தேர்தல் வேட்பாளர்கள் யாருக்கு ஓட்டு போட்டாய் என கேட்பார்கள். அதற்கு அவர் சத்தியமாக உங்களுக்குத்தான், சத்தியமா உங்களுக்குத்தான் என சொல்வார். இதையடுத்து வடிவேலுவும் அவரிடம் யாருக்கு வாக்களித்தாய் என கேட்பார். அதற்கு அந்த நபர் அண்ணே உங்களுக்குதான் போட்டேன் என்பார். அதற்கு வடிவேல் டேய் அவங்ககிட்டயும் இதையேதானே சொன்னே! நான் நம்ப மாட்டேன் என்பார். உடனே அந்த நபர் நீ நம்ப மாட்டேனு தெரிஞ்சிதான் நான் வாக்குச் சீட்டை எடுத்துனு வந்திருக்கேன் என கூறிவிட்டு வாக்குச் சீட்டை காண்பித்து பாருனே, தென்னமர சின்னத்துல குத்தியிருக்கேனா என்பார். இதை கேட்ட வடிவேலு அதிர்ச்சி அடைந்து பார்ப்பார். இந்த காமெடியை நினைவூட்டுகிறது திருப்பத்தூர் சம்பவம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications