மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் பாலகுமாரன்... வைரமுத்து உருக்கம்
எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் என்றும் அவரது மறைவை கனத்த இதயத்தோடு பார்க்கிறேன் என்றும் கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பாலகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவு இலக்கிய துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என கவிஞர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்துகளில் வாழ்வார்
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார். பாலகுமாரன் மறைவை கனத்த இதயத்தோடு பார்க்கிறேன்.

பெண்கள் குறித்த புரிதல்
தன் கடைசி மூச்சுவரை தனது பேனாவை நிறுத்தாத எழுத்தாளர் பாலகுமாரன். பெண்கள் குறித்த புரிதல்கள் பாலகுமாரனின் எழுத்துக்களில் உள்ளன.

நீண்ட நாட்கள் வாசிக்கப்படும்
பாலகுமாரனின் ரசிகர் வட்டம் மிகப் பெரியது. பாலகுமாரன் எழுத்துக்கள் நீண்ட நாட்கள் வாசிக்கப்படும். இவ்வாறு கவிஞர் வைரமுத்து உருக்கமாக கூறியுள்ளார்.

ஒரு தடவ சொன்னா..
எழுத்தாளர் பாலகுமாரன், நாயகன், பாட்ஷா, ஜீன்ஸ், குணா உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ரஜினியின் நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னா மாதிரி என்ற புகழ்பெற்ற டயலாக்குக்கு சொந்தக்காரர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications