மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் பாலகுமாரன்... வைரமுத்து உருக்கம்
எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் என்றும் அவரது மறைவை கனத்த இதயத்தோடு பார்க்கிறேன் என்றும் கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பாலகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவு இலக்கிய துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என கவிஞர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்துகளில் வாழ்வார்
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார். பாலகுமாரன் மறைவை கனத்த இதயத்தோடு பார்க்கிறேன்.

பெண்கள் குறித்த புரிதல்
தன் கடைசி மூச்சுவரை தனது பேனாவை நிறுத்தாத எழுத்தாளர் பாலகுமாரன். பெண்கள் குறித்த புரிதல்கள் பாலகுமாரனின் எழுத்துக்களில் உள்ளன.

நீண்ட நாட்கள் வாசிக்கப்படும்
பாலகுமாரனின் ரசிகர் வட்டம் மிகப் பெரியது. பாலகுமாரன் எழுத்துக்கள் நீண்ட நாட்கள் வாசிக்கப்படும். இவ்வாறு கவிஞர் வைரமுத்து உருக்கமாக கூறியுள்ளார்.

ஒரு தடவ சொன்னா..
எழுத்தாளர் பாலகுமாரன், நாயகன், பாட்ஷா, ஜீன்ஸ், குணா உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ரஜினியின் நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னா மாதிரி என்ற புகழ்பெற்ற டயலாக்குக்கு சொந்தக்காரர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications