கர்நாடகத்தின் லிங்காயத்தும், தமிழகத்தின் வீர சைவமும் வேறு வேறு!
வீர சைவ மதமும், லிங்காயத் மதமும் வெவ்வேறானவை என்று நமது வாசகர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அண்மையில் கர்நாடக அரசு அறிவித்த லிங்காயத் மதமும், தமிழகத்தின் வீர சைவமும் வேறு வேறு என்று நமது வாசகர் ரா.கண்ணப்பன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஒரு சிறு விளக்க கட்டுரை உங்கள் பார்வைக்கு:
அண்மையில் லிங்காயத்தை தனி மதமாக அறிவித்து கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த செய்தியை பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் வீர சைவ லிங்காயத் மதம் என்றே வெளியிட்டன. இது அடிப்படையிலேயே தவறானது ஆகும். லிங்காயத் மதமானது காஷ்மீர சைவத்தை அடிப்படையாகக் கொண்டு பசுவேஸ்வரால் உருவாக்கப்பட்ட மதம்.
உருவ வழிபாட்டை உறுதியாக மறுக்கும் மதம். அருஉருவாக காட்சியளிக்கும் சிவலிங்கத்தை மட்டுமே பூஜிக்கும் மதம். அதனால்தான் இந்த மதத்துக்கு லிங்காயத் என்று பெயர்.
இது கர்நாடகாவில் தோன்றிய மதம். ஆனால் வீரசைவம் என்பது தமிழ்நாட்டில் தோன்றிய மதம். லிங்காயத் மதம் தோன்றுவதற்கு முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுப் பண்டார குல சான்றோர்களால் உருவாக்கப்பட்ட மதம்.
இராஜராஜசோழ அரசுக்கு முன்னமே உருவான மதம், இந்த இரண்டு மதங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ஆகம, அர்ச்சகவிதிகளுக்கு உட்படாதவை.
அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கும் மதங்களாகும். ஆனால் வீரசைவம் என்பது உருவ வழிபாட்டையோ, பல தெய்வ வழிபாட்டையோ மறுக்கும் மதம் அல்ல.
இரண்டுக்கும் இருக்கும் இந்த வேறுபாடு தெரியாமலேயே ஊடகங்கள் இந்த இரண்டும் தங்களும் ஒன்றுபோல் தொடர்ந்து எழுதிவருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும் என்பது ரா கண்ணன் தரும் விளக்கமாகும்.