காவிரி பிரச்சனையை திசை திருப்ப பரம்பிக்குளம் அணையில் அதிகாரிகள் மீது தாக்குதல்- வேல்முருகன் புகார்
சென்னை: பரம்பிக்குளம் அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்ப கேரளா வனத்துறையில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரி அஜய் திட்டமிட்டு சதி செய்வதாகவும் வேல்முருகன் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்துக்கு சொந்தமான பரம்பிக்குளம் ஆழியாறு அணை கேரளா எல்லையில் உள்ளது. இந்த அணையின் பரமாரிப்புப் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறைகள் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் அணையின் பராமரிப்புப் பணிக்கு வழக்கம் போல தமிழக அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே நுழையவிடாமல் கேரளா வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட பொதுமக்களையும் கேரளா கேடர் ஐஎப்எஸ் அதிகாரி அஜய் தலைமையிலான குழுவினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் பொதுமக்களும் வனத்துறை அதிகாரிகளும் படுகாயமடைந்தனர். இது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.
இதனால் பொள்ளாச்சி எல்லையில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு காரணமுமே இல்லாமல் கர்நாடகாவைச் சேர்ந்த கேரளா கேடர் அதிகாரி அஜய் தலைமையிலான குழுவினர் தமிழக அதிகாரிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இது காவிரி நதிநீர் பிரச்சனையை திசை திருப்பி கேரளாவுடன் மோதல் போக்கை உருவாக்கிவிடும் சதித்திட்டமாக தெரிகிறது. ஏனெனில் இத்தாக்குதலை நடத்திய அதிகாரி கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து படித்தவர். அவர் கேரளா பேட்ஜ் அதிகாரியாக இருந்தாலும் கன்னடவெறியுடன் இப்பிரச்சனையை அணுகியிருக்கிறார்.
ஆகையால் கேரளா- தமிழக உறவை சீர்குலைக்கும் சதியுடன் செயல்பட்ட அதிகாரி அஜய்யை கேரளா அரசு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications