பத்மபூஷணை எதிர்பார்க்கவில்லை... மாஜி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி
சென்னை: எனக்கு பத்மபூஷண் விருது கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. இது பெருமையாக இருக்கிறது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி கூறியுள்ளார்.
ஆனால் இந்த விருது மிகவும் தாமதமாக தனக்கு அளிக்கப்படுவதாக பத்மவிபூஷண் விருது பெறத் தேர்வாகியுள்ள பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கோபாலசாமி, மோடி முதல்வராக இருந்த குஜராத்தில் பல வருடம் பணியாற்றியவர் ஆவார். தமிழகத்தின் மன்னார்குடியைச் சொந்த ஊராகக் கொண்டவர். கிரிக்கெட் முதல் கர்நாடக இசை வரை பல விஷயங்களில் ஞானம் கொண்டவர். தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது கலாஷேத்திரா பவுண்டேஷனின் தலைவராக இருக்கிறார்.
இந்த விருடத்தின் பத்ம விருதுகளில் கோபாலசாமிக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகப் பெரியது. ஒருவருடைய பணி அங்கீகரிக்கப்படும்போது அது சிறந்த தருணமாக மாறி விடும். ஆனால் இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு வியப்புதான், ஆனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
அணு விஞ்ஞானி சீனிவாசன்
மறுபக்கம் பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் தனக்கு விருது தாமதமாக வந்துள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தாமதப்படுத்தப்பட்ட விருது. 1990ம் ஆண்டிலேயே நான் பத்ம பூஷண் வாங்கி விட்டேன். இப்போது அடுத்த விருது மிகவும் தாமதமாக வந்துள்ளது. எப்போதும் இல்லை என்பதற்குப் பதில் இப்போதாவது வந்ததே என்ற அடிப்படையில் இதை நான் வரவேற்கிறேன் என்றார்.
கன்னியாகுமாரி

பத்ம விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொருவர் கன்னியாகுமாரி அவசரளா. சிறந்த வயலின் கலைஞரான இவர் கடந்த 40 வருடங்களாக வயலின் இசையில் கொடிநாட்டி வருபவர். தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது குறித்து கன்னியாகுமரி கூறுகையில், நான் கெளரவமாக உணர்கிறேன். எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே எனக்கு ஆசிரியர்கள். கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன் என்றார்.
சுதா ரகுநாதன்

இவர்கள் தவிர சுதா ரகுநாதன், பி.வி.ராஜாராமன், ஆர்.வாசுதேவன் (மறைவுக்குப் பின்னர்) ஆகியோருக்கும் இந்த வருடத்தின் பத்ம விருதுகள் கிடைத்துள்ளன.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications