மோடியை வேடிக்கை பார்க்க வந்த விஜயகாந்த் குடும்பம்!
சேலம்: கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கையில் நேற்றைய சேலம் மோடி கூட்டம் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிப் போனது - குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு.
மோடியுடன், விஜயகாந்த் கலந்து கொண்ட முதல் அரசியல் கூட்டம் என்பதாலும், ஒரு தேசிய தலைவருடன் பொது மேடையல் விஜயகாந்த் கலந்து கொண்ட முதல் கூட்டம் என்பதாலும் விஜயகாந்த் குடும்பமே பூரித்துப் போய்க் காணப்பட்டது.
இந்தப் பூரிப்பின் காரணமாக, நேற்று நடந்த சேலம் கூட்டத்திற்கு விஜயகாந்த் குடும்பத்தினர் திரண்டு வந்திருந்தனர்.

மச்சான் சுதீஷ்
சேலம் தொகுதியில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடுகிறார். கடுமையாகப் போராடி இந்த தொகுதியை மச்சானுக்காக வாங்கிய கதை அனைவரும் அறிந்ததுதான்.

சுதீஷுக்காக பிரசாரம்
இந்தத் தொகுதியில்தான் நேற்று மோடி பிரசாரம் செய்தார்.

ஒரே மேடையில் 14 பேரும்
இந்தக் கூட்டத்தின்போது தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் 14 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நிற்க வைத்தார் விஜயகாந்த்.

மனைவி - மகள்கள்
இந்தப் பிரசாரக் கூட்டத்தைக் காணவும், மோடியைப் பார்க்கவும் விஜயகாந்த் குடும்பத்தினர் திரண்டு வந்தனர். சுதீஷின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் அதில் அடக்கம்.

விஜயகாந்த் மகன்
அதேபோல விஜயகாந்த்தின் மூத்த மகனும் வேடிக்கை பார்க்க வந்திருந்தார்.

பத்திரிக்கையாளர்களுக்குப் பக்கத்தில்
விஜயகாந்த் குடும்பத்தினர் அமர பத்திரிக்கையாளர்களுக்கே அருகிலேயே சீட் போட்டிருந்தனர். அங்கு விஜயகாந்த் மகன், சுதீஷின் மனைவி மகள்கள் உள்ளிட்டோர் கட்சி அடையாள அட்டையுடன் அமர்ந்து மோடி பேச்சையும், விஜயகாந்த்தையும் ரசித்து மகிழ்ந்தனர்.

கட்சி சேலையில் பிரேமலதா
கட்சி சேலையில் பிரேமலதா விஜயகாந்த் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்தார். சுதீஷின் மனைவி பட்டுப் புடவையில் வந்திருந்தார்.

திமுகவுக்குப் பிறகு
திமுகவில்தான் கருணாநிதி, ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு குடும்பத்தினர் வந்து ரசிப்பார்கள். தற்போது அந்த வரிசையில் தேமுதிக குடும்பமும் இணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications