ஜெயலலிதா அவதூறு வழக்குகள் தொடர்ந்தது விஜயகாந்துக்கு நல்லதாப் போச்சாம்!
ஈரோடு: ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு மேல் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்குகள் சம்பந்தமாக நான் செல்லும் இடங்களில் அதை தேர்தல் கூட்டமாக ஆக்கிவிடுகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் தேமுதிக சார்பில் மக்களுக்காக மக்கள் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு 151 பேருக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,

அதிமுக
கடந்த காலத்தில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் இருந்த அதிமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அது போன்று நாங்களும் வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

காவல் துறை
நீதிமன்றத்திற்கு மத்திய அரசு காவல்துறையின் பாதுகாப்பு ஒன்றும் தேவை இல்லை என்கிறது அதிமுக அரசு. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவே தமிழக காவல்துறையை நம்பாமல் தான் தன் பாதுகாப்புக்கு கருப்பு பூனை படையை வைத்துள்ளார்.

வழக்கு
அவர் என் மீது அவதூறு வழக்கு மேல் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்குகள் சம்பந்தமாக நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதை தேர்தல் கூட்டமாக ஆக்கிவிடுகிறேன்.

போட்டி
அதிமுக அவ்வளவு பலமான கட்சி எனில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டியது தானே. எங்களுக்கு எதற்கு 41 தொகுதிகளை அளித்தார்கள். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்றார் விஜயகாந்த்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications