உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவார் - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வி அடையும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுகவுக்கு 22.5 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுகவுக்கு 38.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 26.6 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. பாமக 5.5 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2006 தேர்தலில் விருத்தாசலத்திலும், 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அதேபோல், இந்த முறையும் ரிஷிவந்தியத்தில் தோல்வி அடையும் நிலை இருந்ததாலே அவர், உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தாக கூறப்படுகிறுது.
இந்நிலையில் நியூஸ் 7 கருத்துக்கணிப்பு தினமலர் கருத்துக்கணிப்பில் விஜயகாந்த் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றது.












Click it and Unblock the Notifications