Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரியில் இருபிரிவினரிடையே மோதல்.. போலீஸ் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி, பதற்றம்

புதுச்சேரியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    புதுச்சேரியில் இருபிரிவினரிடையே மோதல்.. போலீஸ் தடியடி, பதற்றம்..வீடியோ

    புதுச்சேரி: காலாப்பட்டில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். மேலும் தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

    புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ரசாயண தொழிற்சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக இன்று கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

    Violence in Puduchery, Police thrown tear gas on the crowd and latti charge

    அப்போது ஒரு பிரிவினர் தொழிற்சாலை விரிவாக்கத்துக்க ஆதரவு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போதும் கூட்டத்தினர் கலையாததால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

    தொடர்ந்து அவர்கள் சாலையில் திரண்டு மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.

    இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி என அதிரடி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+