அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லையா?
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லை என விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லை என விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக்கிற்கு கடந்த 9ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

3 மணி நேரம் விசாரணை
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷனில் இளவரசியின் மகன் விவேக் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விவேக் மறுப்பு
அப்போது ஜெயலலிதா குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கேள்விகளை தெரிவிக்க விவேக் மறுத்துவிட்டார்.

ஜெ.வை பார்க்கவில்லை
வரும் 28 ஆம் தேதி விசாரணை கமிஷனில் மீண்டும் ஆஜராக வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது அவரை சந்திக்கவில்லை என விவேக் விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்களுக்கும் அனுமதியில்லை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர், அப்போதைய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை பார்க்காமலேயே திரும்பினர்.

விவேக்கும் பார்க்கவில்லை
சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டதாகவும் வேறு யாரையும் பார்க்க அவர் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரிய, அவரால் வளர்க்கப்பட்ட விவேக் கூட ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications