அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லையா?
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லை என விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லை என விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக்கிற்கு கடந்த 9ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

3 மணி நேரம் விசாரணை
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷனில் இளவரசியின் மகன் விவேக் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விவேக் மறுப்பு
அப்போது ஜெயலலிதா குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கேள்விகளை தெரிவிக்க விவேக் மறுத்துவிட்டார்.

ஜெ.வை பார்க்கவில்லை
வரும் 28 ஆம் தேதி விசாரணை கமிஷனில் மீண்டும் ஆஜராக வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது அவரை சந்திக்கவில்லை என விவேக் விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்களுக்கும் அனுமதியில்லை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர், அப்போதைய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை பார்க்காமலேயே திரும்பினர்.

விவேக்கும் பார்க்கவில்லை
சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டதாகவும் வேறு யாரையும் பார்க்க அவர் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரிய, அவரால் வளர்க்கப்பட்ட விவேக் கூட ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications