சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் ஆஜர்
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் ஆஜராகியுள்ளனர்.
சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசி மகன் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
வருமான வரித்துறையின் கிடுக்குப்பிடியில் சிக்கியிருக்கிறார் விவேக். சசிகலாவின் சாம்ராஜ்யத்தின் பெரும்பகுதியை நிர்வகித்து வரும் 27 வயது விவேக், 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ1,000 கோடி மதிப்பில் ஜாஸ் சினிமாஸை வாங்கியபோதே சர்ச்சை வெடித்தது.

தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளும் ஜாஸ் சினிமாஸை விவேக் வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என குடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென சென்னையில் விவேக் செய்தியாளர்களிடம் சந்தித்து, வருமான வரித்துறை கடமையை செய்கிறது; நான் கேள்விகளுக்கு பதில் தந்து கொண்டிருக்கிறேன் என்று மட்டும் கூறினார்.
இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வருவாய் கிடைத்தது? என்பது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு விவேக் பதில் தரவில்லை. இதனிடையே விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் வங்கிக் கணக்குகள் மூலமாக பெருமளவு பணம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விவேக்கின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications