இந்து தலைவர்கள் 10 பேரை கொல்ல திட்டமிட்ட பக்ரூதீன் குரூப்… ஐவரை கொன்றதாக ஒப்புதல்

மதுரை சுரேஷ், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்பட இந்து தலைவர்கள் படுகொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபட்டார்.
ஆந்திர மாநிலம், புத்தூரில் தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளிகளை தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்த பன்னா இஸ்மாயில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் வேலூரில் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் பல பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர். அக்டோபர் 2012ல் அரவிந்தரெட்டி தொடங்கி 10 மாதத்தில் 5 பேரை கொன்றோம் என்றும் ஒரே ஆண்டில் குறைந்தது 10 பேரை கொல்லத் திட்டமிட்டோம் ஆனால் 5 பேரை மட்டுமே கொலை செய்தோம் என்றும் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மதுரை சுரேஷ், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்பட 5 பேரை நாங்கள்தான் கொன்றோம் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த கொலைகளை செய்துவிட்டு போலி நபரை போலீசில் சிக்க வைத்ததும் விசாரணையில அம்பலமாகியுள்ளது.
வேலூர் அரவிந்த ரெட்டி, பரமக்குடி முருகன் கொலையில் போலி நபர் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.சென்னையில் 2 பேரை கொல்லத் திட்டமிட்ட நிலையில் காவல்துறையிடம் சிக்கியதாக பக்ருதீன் கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications