கோடாரி, கடப்பாரை.. அண்ணன் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடிக்கிறோம்-சீமான்
வேதாரண்யம்: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் கடப்பாரை, கோடாரி கொண்டு மீனவர்களால் இடிக்க அனுமதிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
வேதாரண்யத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: உலகின் 2-வது பெரிய கடற்கரையில் ஆளுக்கு இரண்டரை ஏக்கரில் படுத்துகிடக்கிறார்களே.. அவர்கள் என்ன..... செய்தார்கள்? நாம் தமிழர் ஆட்சி அமையும்.. எப்படி கர்நாடகா அரசு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அமைதி காக்கிறதோ அதேபோல, மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை கடப்பாரை கொண்டு இடிப்பார்கள்.. அங்கே இருக்கும் எலும்புகளை எடுத்துக் கொண்டு போய் எங்கேயெனும் வைத்துக் கொள்.. அண்ணன் அரசு அமைதியாக இருக்கும்.

ஸ்டாலினுக்கு அவமரியாதை: கர்நாடகாவில் முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்துக்கு காலணி மாலை அணிவிக்கிறார்கள். அவர் இறந்தது போல தூக்கி செல்கிறார்கள். எனக்கு துடிக்கிறது. வலிக்கிறது.. ஏன் எனில் அவர் 'தமிழ்நாட்டு' முதலமைச்சர் என்பதால். ஆனால் திமுகவில் யாரும் உயிருடன் இல்லாததால், மானம் ரோஷம் இல்லை என்பதால் வாய் திறக்கவில்லை. அதற்கும் நாம் தமிழர்தான் பேச வேண்டியதிருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் சொல்லட்டும்..: கர்நாடகா மக்களின் போராட்டத்தை தடுக்க முடியாது என்கிறார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. அதேபோல, தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை தடுக்க முடியாது என தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு அமைதியாக இருக்கட்டும். நாங்க பார்த்து கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் பட அவமதிப்பு என்பது 8 கோடி தமிழ் மக்களுக்கு அவமானம். ஒரு பேரினத்துக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம்.

நெய்தல் படை கட்டுவோம்: எனக்கு நீ ஒருமுறை அதிகாரத்தைக் கொடு. சிங்களவன் ஒரு மீனவனைத் தொட முடியுமா? அப்படி ஒரு மீனவனைத் தொட்டுவிட்டால் நான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவேன். எங்கே என் மீனவனை தொடச் சொல்லுங்க பார்ப்போம். இந்திய ராணுவம் ஒரு மீனவரைக் கூட காப்பாற்றவில்லையே.. என் ராணுவம் என்னைக் காப்பாற்றி இருந்தால் நான் ஏன் நெய்தல் படை கட்ட வேண்டும்? என் மீனவர்கள் மீதான தாக்குதல்கள், ஈழத் தமிழர் படுகொலை காட்சிகள் என் ஆழ்மனதில் இருக்கின்றன. இதற்கு ஒருநாள் பதில் சொல்லாமல் ஒரு சிங்களவனும் தப்பிக்க முடியாது. நான் வன்மம் கொண்ட மிக மோசமான மிருகம். நாம் தமிழர் கட்டும் நெய்தல் படையில் கையெறி குண்டுகளும் துப்பாக்கிகளும் கொடுத்து அனுப்புவோம். சிங்களவன் தொட்டல் அடித்து தாக்கு என்போம். வெறுமனே கடலுக்குள் சாவதற்கு பதில் சிங்களவனை கொன்றுவிட்டு செத்துப் போகலாம்.
ஆமைக்கறி: ஆமைக்கறி நான் சாப்பிட்டது இல்லை. ஆனால் எனக்கு போட்டார் என்றவுடன் எள்ளி நகையாடுகின்றனர். அவ்வளவு சத்து.. ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட முடியாது. தசைகள் இறுக்கமாகிவிடும். இவ்வாறு சீமான் கூறினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications