Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடாரி, கடப்பாரை.. அண்ணன் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடிக்கிறோம்-சீமான்

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் கடப்பாரை, கோடாரி கொண்டு மீனவர்களால் இடிக்க அனுமதிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

வேதாரண்யத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: உலகின் 2-வது பெரிய கடற்கரையில் ஆளுக்கு இரண்டரை ஏக்கரில் படுத்துகிடக்கிறார்களே.. அவர்கள் என்ன..... செய்தார்கள்? நாம் தமிழர் ஆட்சி அமையும்.. எப்படி கர்நாடகா அரசு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அமைதி காக்கிறதோ அதேபோல, மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை கடப்பாரை கொண்டு இடிப்பார்கள்.. அங்கே இருக்கும் எலும்புகளை எடுத்துக் கொண்டு போய் எங்கேயெனும் வைத்துக் கொள்.. அண்ணன் அரசு அமைதியாக இருக்கும்.

We Should demolish Anna, Karunanidhi, MGR, Jayalaithaa memorials in Marina: Seeman

ஸ்டாலினுக்கு அவமரியாதை: கர்நாடகாவில் முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்துக்கு காலணி மாலை அணிவிக்கிறார்கள். அவர் இறந்தது போல தூக்கி செல்கிறார்கள். எனக்கு துடிக்கிறது. வலிக்கிறது.. ஏன் எனில் அவர் 'தமிழ்நாட்டு' முதலமைச்சர் என்பதால். ஆனால் திமுகவில் யாரும் உயிருடன் இல்லாததால், மானம் ரோஷம் இல்லை என்பதால் வாய் திறக்கவில்லை. அதற்கும் நாம் தமிழர்தான் பேச வேண்டியதிருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் சொல்லட்டும்..: கர்நாடகா மக்களின் போராட்டத்தை தடுக்க முடியாது என்கிறார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. அதேபோல, தமிழ்நாட்டு மக்களின் உணர்வெழுச்சியை தடுக்க முடியாது என தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு அமைதியாக இருக்கட்டும். நாங்க பார்த்து கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் பட அவமதிப்பு என்பது 8 கோடி தமிழ் மக்களுக்கு அவமானம். ஒரு பேரினத்துக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம்.

We Should demolish Anna, Karunanidhi, MGR, Jayalaithaa memorials in Marina: Seeman

நெய்தல் படை கட்டுவோம்: எனக்கு நீ ஒருமுறை அதிகாரத்தைக் கொடு. சிங்களவன் ஒரு மீனவனைத் தொட முடியுமா? அப்படி ஒரு மீனவனைத் தொட்டுவிட்டால் நான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவேன். எங்கே என் மீனவனை தொடச் சொல்லுங்க பார்ப்போம். இந்திய ராணுவம் ஒரு மீனவரைக் கூட காப்பாற்றவில்லையே.. என் ராணுவம் என்னைக் காப்பாற்றி இருந்தால் நான் ஏன் நெய்தல் படை கட்ட வேண்டும்? என் மீனவர்கள் மீதான தாக்குதல்கள், ஈழத் தமிழர் படுகொலை காட்சிகள் என் ஆழ்மனதில் இருக்கின்றன. இதற்கு ஒருநாள் பதில் சொல்லாமல் ஒரு சிங்களவனும் தப்பிக்க முடியாது. நான் வன்மம் கொண்ட மிக மோசமான மிருகம். நாம் தமிழர் கட்டும் நெய்தல் படையில் கையெறி குண்டுகளும் துப்பாக்கிகளும் கொடுத்து அனுப்புவோம். சிங்களவன் தொட்டல் அடித்து தாக்கு என்போம். வெறுமனே கடலுக்குள் சாவதற்கு பதில் சிங்களவனை கொன்றுவிட்டு செத்துப் போகலாம்.

ஆமைக்கறி: ஆமைக்கறி நான் சாப்பிட்டது இல்லை. ஆனால் எனக்கு போட்டார் என்றவுடன் எள்ளி நகையாடுகின்றனர். அவ்வளவு சத்து.. ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட முடியாது. தசைகள் இறுக்கமாகிவிடும். இவ்வாறு சீமான் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+