ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டாவை சட்ட ரீதியாக சந்திப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா விலங்குகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தால், அதை மத்திய அரசு எதிர்கொள்ளும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டது. இந்த உத்தரவை பெறுவதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே எதிர்க்கட்சிகளும் கூட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றியும், வாழ்த்துகளையும் கூறியுள்ளன. இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். மதுரை விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

We will legally face PETA if they file petition against Jallikattu: Pon.Radhakrishnan.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும், மதுரை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாலை அணிவித்து, மேள, தாளத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜல்லிக்கட்டின்போது மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி, உச்சநீதிமன்றத்தில், தடை கேட்டு வழக்கு தொடரப்படும் என்று பீட்டா எனப்படும் விலங்குகள் நல அமைப்பு அறிவித்துள்ளது குறித்து, பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "பீட்டா வழக்கு தொடர்ந்தால், அதை மத்திய அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+